செய்திகள் :

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

post image

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை லிட்டராவது அருந்திவிடுவார்கள்.

சரி.. அடுத்து அதாவது தண்ணீருக்கு அடுத்து மக்கள் அதிகம் குடிக்கும் பானமாக இருப்பது எது தெரியுமா? பலரும் இன்று வரை விட முடியாமல் தவிக்கும் பானம்தான் அது. தேநீர்.

இந்த தேநீர் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இன்று வரை அதற்கு கோடிக்கணக்கான அடிமைகள் இருக்கிறார்கள். எதேச்சையாக ஒரு விவசாயி, குடிக்கும் தண்ணீரில் தேயிலை இலைகளைப் போட்டு கொதிக்க வைத்தபோது அதிலிருந்து வந்த மணம்தான் தேநீர் கண்டுபிடிக்க உதவியதாகவும், இல்லை இல்லை, சீனாவின் பேரரசர் ஷென்னோங் தான், தேநீரை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இவர்தான் தேநீரைக் கண்டுபிடித்தவர் என்று உறுதிபடக் கூறிவிட்டால் அவருக்கு ஆலயம் கட்டக் காத்திருப்பவர்கள் ஏராளம்.

காரணம், உலகளவில் தண்ணீருக்கு அடுத்த படியாக அதாவது உலக மக்களால் அதிகம் குடிக்கப்படும் பானமாக தேநீர் உள்ளது என்பது இதனை உறுதி செய்கிறது.

முதலில், தேநீர் என்பதை உடல்நலக் குறைவின்போது கொடுக்கும் மருந்தாகவே மக்கள் பயன்படுத்தினர். பிறகு அதன் ருசி பிடித்துப்போனதால், தேநீர் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

பொதுவாக பழச்சாறு, குளிர்பானங்கள் என்றால் அளவில் அதிகமாக மக்கள் பருகும் நிலையில், ஒரு டம்ளரில் சிறிய அளவில் குடிக்கும் தேநீர், மற்ற பானங்களை எல்லாம் முந்தியிருப்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது.

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க