செய்திகள் :

மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!

post image

மியான்மர் நாட்டில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 35 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ளது.

மியான்மரில் கடந்த மார்ச் 28 அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 3,900 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான பொருள் சேதங்களை சந்தித்துள்ள அந்நாட்டுக்கு சர்வதேச நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசின் தலைவர் ஜென்ரல் மின் அவுங் ஹலைங்குடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், பலியான மக்களுக்காக தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், மியான்மர் நாட்டுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய பாகிஸ்தான் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மொத்தம் சுமார் 70 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்படவுள்ள நிலையில் அதன் முதல் பகுதியாக கூடாரங்கள், தயாரான உணவுகள், தார்பாய்கள், போர்வைகள், மருந்துகள் மற்றும் குடிநீர் தொகுதிகள் அடங்கிய 35 டன் அளவிலான பொருள்கள் இன்று (ஏப்.1) அனுப்பப்பட்டுள்ளது.

மியான்மரின் யாங்கோன் நகருக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தாரிக் ஃபசல் சௌத்ரி கலந்து கொண்டார்.

மேலும், இந்த உதவிகளுக்கு மியான்மரின் தூதர் பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன் நிவாரணப் பணிகளுக்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளைப் பாரட்டினார்.

முன்னதாக, இந்தியா சார்பில் மியான்மர் நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவுக்குச் சென்ற அமெரிக்கர் கைது!

இந்தியாவின் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலுள்ள தடை செய்யப்பட்ட தனித் தீவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான வடக்கு சென்... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்...!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், இன்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.ம... மேலும் பார்க்க

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க