செய்திகள் :

``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

post image

"அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்" என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமெரிக்கா- ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதனை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

அணுசக்தி திட்டம் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ட்ரம்ப் முடிவு செய்து ஈரான் உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் ஈரான் அந்த கடிதத்தை ஏற்கவில்லை.

ஈரானை தொடும் முன்பு ஒவ்வொரு நாடுகளும் யோசிக்க வேண்டும். இது பழைய ஈரான் இல்லை என்று கூறி புறக்கணித்து விட்டனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்நிலையில் இதுதொடர்பாக ட்ரம்ப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். "ஈரான் எங்களின் டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது குண்டுமழை பொழிவோம்.

இந்த சம்பவம் இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் இருக்கும். அணு ஆயுத ஒப்பந்ததிற்கு தயாராக வில்லை என்றால் ஈரான் கடும் பொருளாதார தடைகளைச் சந்திக்கும்" என்று கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம்சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும்கொடுக்கலாமா... மேலும் பார்க்க