செய்திகள் :

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

post image

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம் சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும் கொடுக்கலாமா, குழந்தைகளுக்கு பழைய சாதம் கொடுத்தால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

பெரியவர்கள் சாப்பிடுவதைப் போல, குழந்தைகளுக்கும் பழைய சாதம் கொடுக்கலாம். அதில் ஒரு பிரச்னையும் இல்லை.  இன்னும் சொல்லப் போனால் இப்போது வாட்டிவதைக்கும் வெயிலின் பாதிப்பிலிருந்தும் குழந்தைகளை அது காக்கும்.

பழைய சாதம் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உள்ளன.   பழைய சாதத்தில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியாக்கள் (Lactic Acid Bacteria) அதிகமாக உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் பழைய சாதத்தை நொதிக்கச் செய்து, அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன.  குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் விளைவாக மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், தாதுச்சத்துகள் போன்றவை உடலில் அதிகரிக்கும்.

குழந்தைகளுக்குப் பழைய சாதம் கொடுக்கும்போது, அத்துடன் ஃப்ரெஷ்ஷான தயிர் சேர்த்துக் கொடுக்கலாம். அதன் மூலம் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் பழைய சாதம் உள்ளது. காலை உணவை சாப்பிட மறுக்கும் பட்சத்தில் உங்கள் மகளுக்கு தயிர் சேர்த்த பழைய சாதம் கொடுப்பது நல்ல சாய்ஸ்.

பழைய சாதம்

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போது, எந்த உணவு எடுத்தாலும் அது பேலன்ஸ்டு உணவாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பழைய சாதத்துடன் தயிர் மட்டுமன்றி, காய்கறிகளையும் சேர்த்துக் கொடுத்தால் அது முழுமையான உணவாக இருக்கும். மற்றபடி பழைய சாதம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

"அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்" என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமெரி... மேலும் பார்க்க