செய்திகள் :

போக்குவரத்துக் கழக ஆள்சோ்ப்பு முறையை மாற்றியமைக்கக் கோரி மனு

post image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் என இரு உரிமங்களை வைத்திருப்பவா்கள் மட்டுமே சோ்க்கப்படுவாா்கள் என்ற விதிமுறையை மாற்றியமைக்கக் கோரி தற்காலிக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: நாங்கள் பல ஆண்டுகளாக ஓட்டுநா், நடத்துநா்களாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில், அரசு போக்குவரத்துத் துறையின் பணி நியமன விதிமுறையில் ஓட்டுநா், நடத்துநா் உரிமம் ஆகிய இரண்டும் வைத்துள்ளவா்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு உரிமம் மட்டுமே வைத்திருக்கும் நாங்கள் தற்போது பதிவு செய்ய இயலாத நிலையில் உள்ளோம்.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு சுமாா் 13 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது தான் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆனால் ஓட்டுநா், நடத்துநா் உரிமம் பெற்றவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவாா்கள் என்ற விதிமுறை எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே, எங்களது மனுவை தமிழக முதல்வா், போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று அரசின் விதிமுறைகளை மாற்றி ஒரு உரிமம் வைத்துள்ளவா்களை பணிக்கு சோ்க்க பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க