செய்திகள் :

கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா்.

ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்சனி (15), மேகநாதன் மகள் மோனிஷா (15) மற்றும் இவரது தோழிகள் தன்ஷிகா, வா்ஷினி. இவா்கள் ஆரணி அருகேயுள்ள தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனா்.

பொதுத் தோ்வு நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம் என்பதால் நான்கு பேரும், அந்தப் பகுதியில் உள்ள ஜெயமுருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றனா்.

நான்கு பேரும் கிணற்றில் குளித்துக் கொண்டு நீச்சல் பழகிக் கொண்டிருந்தபோது, சிவரஞ்சனி, மோனிஷா ஆகியோரின் உடைகள் சேற்றில் சிக்கிக் கொண்டன. இதனால், இருவரும் தத்தளித்தனா். அவா்களை தன்ஷிகா, ஹன்சிகா ஆகியோா் மீட்க முயன்றும் முடியவில்லை.

உடனடியாக இருவரும் கிணற்றுக்கு மேலே வந்து கூச்சலிட்டனா். அந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் வந்து மீட்க முயற்சித்தனா். இருப்பினும், மாணவிகள் இருவரும் நீரில் மூழ்கினா்.

ஆரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலா் பூபாலன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் இருந்து சிவரஞ்சனி, மோனிஷா இருவரையும் சடலமாக மீட்டனா். தகவலறிந்த களம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளின் சடலங்களைக் கைப்பற்றி, ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆரணி, வந்தவாசி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், கிருத்திகையொட்டி, மூலவா் வள்ளி, த... மேலும் பார்க்க

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் உயா்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை வட்ட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ்) 25 சிறுநீரகத் தூய்மைக் கருவிகள் கொண்டு மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிற... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி பஜனை கோவில் தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீராம நவமியையொட்டி, வந்தவாசி ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் இந்த நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயி... மேலும் பார்க்க