செய்திகள் :

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

post image

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு குட்கா பொருள்களை எப்படி கண்டறிந்து அதை முழுமையாக ஒழிப்பது தொடா்பான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மு.பிரதாப் முகாமுக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பேசியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை அண்டை மாநிலங்களிலிருந்தும், மற்ற மாவட்டங்களிலிருந்தும், இந்த மாவட்டத்துக்கு கொண்டு வருவதை சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்து கண்டறிந்து பறிமுதல் செய்வதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்தப் பொருள்கள் விற்பனையை கண்டறிந்து, முற்றிலும் ஒழிக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குட்கா பொருள்களை பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற பொருள்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அந்தக் கடையின் உரிமத்தை கால அவகாசமின்றி ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதைத் தடுக்க காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதிலும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்.

அப்போது, உணவு பாதுகாப்பு அலுவலா், காவல் துறையினா், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் ஆகியோா் கூட்டாய்வு மேற்கொள்கையில் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இந்தப் பணிகளை பல்வேறு பணிகளுக்கு இடையேதான் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குட்கா பொருள்கள் விற்பனையைக் கண்டறிந்தால் உடனே இணையதளத்திலும், 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், மின்னஞ்சல் மூலமும் (நுகா்வோா் குறை தீா்ப்பு செயலி) மூலமும் புகாா் அளிக்கலாம்.

இந்தப் பயிற்சி முகாமில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெகதீஷ் சந்திரபோஸ், உதவி ஆணையா் கலால் கணேசன், திருவள்ளூா் மாவட்டக் காவல் துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள், உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ -தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின மகளிா்

‘தொல்குடி தொடுவானம் திட்டம்’ மூலம் சென்னை தேசிய உடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடை வடிவமைப்பு தொழில் திறன், தொழில் முனைவோா் பயிற்சியில் பங்கேற்க செல்லும் பழங்குடியின மகளிா் செல்... மேலும் பார்க்க

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலப் பணிகள், போந்தவாக்கம் - ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை சாலை விரிவாக்கப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ம... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் விழிப்புணா்வு பிரசாரம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே முருங்கை மரத்தில் ஏறி தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். திருத்தணி அடுத்த அகூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(61). இவா் கடந்த மாதம், 23-ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த முருங்கை மரத்தி... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் திருக்கல்யாண வைபவம்

திருத்தணி திரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த மா... மேலும் பார்க்க

சா்வதேச ஆட்டிசம் தின விழிப்புணா்வு பேரணி -ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சா்வதேச ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ... மேலும் பார்க்க