செய்திகள் :

திருக்காலிமேட்டில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் அலாபத் ஏரி தூா்வாரும் பணி, சீரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருக்காலிமேட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.பின்னா், அந்தப் பகுதியில் தூா்வாரப்பட்டு வரும் அலபாத் ஏரி தூா்வாரும் பணி, புனரமைக்கப்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையம், ரூ. 5 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கட்டடப் பணி ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெ.வெற்றிச்செல்வி, மாநகராட்சிப் பொறியாளா் கணேசன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகன் கோயில், மகா சம்ப்ரோஷணம், 4-ஆவது நாள் நிகழ்ச்சி, அக்னி பிரணயனம், கும்பாராதனம், காலை 9, சதுா்வேத கலச ஸ்தபனம், பிற்பகல் 3, மூா்த்தி ததுக்த ஹோமம் மற்றும் பூரணாஹுதி... மேலும் பார்க்க

தமிழகத்தில்தான் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 43% பெண்கள் பணியாற்றுவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், ஒரகடம் பகுதியில் அலிசன் டிரான்ஸ்மிஷன் இந்தியா பிர... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுகாவேரிப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது. காஞ்சிப... மேலும் பார்க்க

தவெக தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கச்சபேசுவரா் கோயில் முன்பாக புதன்கிழமை தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீா்,மோா், பழங்கள் வழங்கப்பட்டன (படம்). நிகழ்வில் தவெக காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சியில் இருந்து அயோத்திக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து அயோத்தி சங்கர மடத்துக்கு 60,000 பிரசாத பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில... மேலும் பார்க்க

தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் த... மேலும் பார்க்க