செய்திகள் :

`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர் - என்ன ஸ்பெஷல்?

post image

இப்போது மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. விதவிதமான மாம்பழங்கள் மார்க்கெட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் மட்டுமே விளையக்கூடிய மியாசாகி மாம்பழங்கள் இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் விளைகிறது. உலகின் அதிக விலையுள்ள மாம்பழமாக பார்க்கப்படும் அவை ஒவ்வொன்றும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போஷி என்ற கிராமத்தில் வசிப்பவர் சுமன்பாய் கெய்க்வாட். இவரது மகன் நந்த்கிஷோர் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)
மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)

அப்போது மியாசாகி மாம்பழம் குறித்து நந்த்கிஷோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாங்கன்றை விலைக்கு வாங்க ஆன்லைனில் தேடினார். அக்கன்றுகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவை இந்திய சூழ்நிலைக்கு வளருமா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

இதில் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிராவின் பர்பானி போன்ற இடங்களில் சிறப்பாக வளர்வதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து ஒரு மரக்கன்று ரூ.6500 வீதம் 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்தார். அவற்றை தனது தாயாரிடம் கொடுத்து அவர்களது தோட்டத்தில் நடவு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவை தோட்டத்தில் நடப்பட்டது.

மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)
மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)

இரண்டு ஆண்டில் மாமரம் பழங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அந்த மாம்பழங்களை என்ன விலைக்கு விற்பனை செய்யலாம் என்பது குறித்து பர்பானியில் இதே மாம்பழங்களை விளைவிக்கும் வர்த்தகரிடம் நந்த்கிஷோர் ஆலோசனை நடத்தி தங்களது தோட்டத்தில் விளையும் மாம்பழத்திற்கான விலையை நிர்ணயம் செய்தார்.

அந்த மாம்பழங்களை தலா ரூ.10000-க்கு இப்போது சுமன்பாய் விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் நாண்டெட்டில் நடந்த விவசாய கண்காட்சியில் இந்த மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அங்கும் ஒரு பழம் ரூ.10000-க்கு விற்பனையானது.

மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)
மியாசாகி மாம்பழம் ( Miyazaki Mango)

இதையடுத்து இப்பகுதியில் மேலும் சில விவசாயிகள் மியாசாகி மாம்பழத்தை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மியாசாகி மாம்பழம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. அதோடு வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகளை கொண்டது. குறைவான சர்க்கரை அளவு கொண்ட இந்த மாம்பழம் கண்பார்வை, ஜீரணம், தோல் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவேதான் இந்த மாம்பழத்திற்கு உலக அளவில் அதிக வரவேற்பு இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் - ட்ரம்ப்... மேலும் பார்க்க

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021."சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வான... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயதுக் குழந்தைக்கு பழைய சாதம் கொடுக்கலாமா, அதனால் சளி பிடிக்குமா?

Doctor Vikatan: என்னுடைய மகளுக்கு 10 வயதாகிறது. பெரும்பாலும் காலையில் எதையும் சாப்பிட மறுக்கிறாள். வீட்டில் நானும் என் கணவரும் தினமும் காலையில் பழையசாதம்சாப்பிடுகிறோம். அதையே என் மகளுக்கும்கொடுக்கலாமா... மேலும் பார்க்க

``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

"அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்" என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அமெரி... மேலும் பார்க்க