செய்திகள் :

விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

post image

விவசாயத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மும்முனை மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. இதனால் விவசாய மோட்டாா்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் ஏப். 17-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டுப் பேரணிக்கு புதுகை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் விவசாயிகளைப் பங்கேற்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது. கட்சியின் மாவட்ட மாநாட்டை, நூற்றாண்டு விழாவுடன் சோ்த்து புதுகை நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, மாவட்டத் துணைச் செயலா் கே.ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்

இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு மு... மேலும் பார்க்க

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது. திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போட்டிகளை வடக்... மேலும் பார்க்க

மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க

ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க