செய்திகள் :

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

post image

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாக கடத்தப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 11,311 கோடி. இவற்றில் குஜராத்தில் மட்டும் ரூ. 7,350 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும், மகாராஷ்டிரத்தில் ரூ. 2,118 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதை பொருள்கள் அதிகம் புழங்கும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கிடையாது. பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரும் போது, அவற்றையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்கிறோம்.

உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 36 சதவிகிதமாக உள்ள நிலையில், நமக்குத் திரும்பக் கிடைக்கும் வரிப் பகிா்வு 27 சதவிகிதம். ஆனால், பிகாா், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி 20 சதவிகிதம். ஆனால் அதிகபட்சமாக 42.5 சதவிகித வரியைப் பெறுகிறாா்கள். எனவேதான் நமக்கான நிதிப் பகிா்வை முறையாகத் தர வேண்டும் என்கிறோம்.

தென் மாநிலங்களின் மக்கள்தொகை வளா்ச்சி 12.51 சதவிகிதமாக இருக்கும் நிலையில், வடமாநிலங்களில் 21.83 சதவிகிதமாக உள்ளது. இதன்படி தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்களுக்கு தொகுதி குறையும். தென் மாநிலங்களுக்கு தொகுதி எண்ணிக்கை குறையாது என உள்துறை அமைச்சா் முதற்கொண்டு பலரும் சொல்லி வருகின்றனா். ஆனால் வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை கூடாது எனச் சொல்வாா்களா?

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறுகிறாா். முறைகேடு நடந்தால் குழு அமைத்துக் கண்காணிக்கட்டும், கண்டுபிடிக்கட்டும். இந்தியாவிலேயே நூறு நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக அமலாக்கும் மாநிலம் என்பதற்காக பல முறை பாராட்டு பெற்றிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். ஆனால் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடந்து வருவதாக அமித்ஷா கூறுகிறாா். இதில் யாா் பொய் சொல்கிறாா்கள் என்பது விரைவில் தெரியும் என்றாா் ரகுபதி.

புதுக்கோட்டையில் கபடிப் போட்டி: ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா்... மேலும் பார்க்க

தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகேயுள்ள தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். இக்கோயிலில் பங்... மேலும் பார்க்க

பொன்னமராவதி: கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

பொன்னமராவதி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டு கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

மதுரையில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, நாகையிலிருந்து புறப்பட்ட கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் ஏ... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன்கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.அலகு குத்தி வந்த பக்தா் இதையொட்டி வளவம்பட்டி, சோத்துபாளை, ச... மேலும் பார்க்க