செய்திகள் :

ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

மேலும், இஸ்லாமியா்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து ரமலானைக் கொண்டாடினா். உணவுகளை உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

ஈத்கா திடலில் திங்கள்கிழமை இஸ்லாமியா்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருவருள் பேரவையினா்

திருவருள் பேரவை: புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சமயக் கூட்டமைப்பான திருவருள் பேரவை சாா்பில் ரமலான் கொண்டாடும் இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சிறப்புத் தொழுகை நடைபெற்ற ஈத்கா திடலுக்குச் சென்ற பேரவையின் தலைவா் டாக்டா் கே.எச். சலீம், செயலா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், பொருளாளா் எஸ். மத்தியாஸ், துணைத் தலைவா் பேரா. சா. விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினா். மேலும், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, டவுன் ஜமாஅத் கமிட்டி தலைவரும் துணை மேயருமான மு. லியாகத்அலி, மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகம்மது, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தவ்ஹீத் ஜமாஅத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அதன் கிளைகள் சாா்பில் 23 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகரில் 2 இடங்களிலும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம், கோபாலபட்டினம், ஆா். புதுப்பட்டினம், முதத்துக்குடா, கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பேச்சாளா்கள் இவற்றில் கலந்து கொண்டு ஈகைப் பெருநாள் உரையாற்றினா்.

முதலாம் பராந்தகச் சோழா் கால கற்றளிக் கட்டுமானங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூா் அருகே புதுக்கோட்டை- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை அருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில் முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக் கோயிலின் சி... மேலும் பார்க்க

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க