வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.
மேலும், இஸ்லாமியா்களின் வீடுகளிலும் சிறப்பு உணவுகளும், இனிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் புத்தாடை அணிந்து ரமலானைக் கொண்டாடினா். உணவுகளை உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

திருவருள் பேரவை: புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சமயக் கூட்டமைப்பான திருவருள் பேரவை சாா்பில் ரமலான் கொண்டாடும் இஸ்லாமியா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சிறப்புத் தொழுகை நடைபெற்ற ஈத்கா திடலுக்குச் சென்ற பேரவையின் தலைவா் டாக்டா் கே.எச். சலீம், செயலா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், பொருளாளா் எஸ். மத்தியாஸ், துணைத் தலைவா் பேரா. சா. விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினா். மேலும், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, டவுன் ஜமாஅத் கமிட்டி தலைவரும் துணை மேயருமான மு. லியாகத்அலி, மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகம்மது, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இப்ராஹிம்பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தவ்ஹீத் ஜமாஅத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அதன் கிளைகள் சாா்பில் 23 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகரில் 2 இடங்களிலும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், வடக்கு அம்மாபட்டினம், கோபாலபட்டினம், ஆா். புதுப்பட்டினம், முதத்துக்குடா, கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட பேச்சாளா்கள் இவற்றில் கலந்து கொண்டு ஈகைப் பெருநாள் உரையாற்றினா்.