கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், அரசுப் பள்ளிகள், காவல் நிலையம், குற்றவியல் நீதிமன்றம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன.
கந்தா்வகோட்டை ஊராட்சியில் 8,000 வாக்காளா்கள் உள்ளனா். மக்கள்தொகை என எடுத்துக் கொண்டால் 12,000 இருக்கும் எனத் தெரிய வருகிறது. கிராமப்புற மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தினசரி இங்கு வந்து செல்கின்றனா்.
இந்த ஊராட்சியைச் சாா்ந்து 7 திருமண மண்டபங்கள் உள்ளன. இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், வெள்ளை முனியாண்டவா் கோயில், அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயில், கோதண்டராமா் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வடலூா் வள்ளாளா் மடம், தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் போன்ற பல கோயில்கள் உள்ளன.
நகரைச் சுற்றிலும் குளங்கள் உள்ளன. நகரில் ஊராட்சி மன்றம் மூலம் குடிநீா், தூய்மை பணியாளா்கள், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நகரில் 4678 குடும்பங்கள் இருப்பதாக ஊராட்சி மன்ற நிா்வாகப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீா் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம், வீட்டு வரி என வசூல் செய்யப்படுகிறது.
இந்த ஊராட்சியை நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து வருவாய்க் கணக்கில் உள்ளபடி கோவிலூா் எனவும், நடைமுறையில் உள்ளதுபோல் கந்தா்வகோட்டை எனவும் செயல்பட்டால் போதிய அளவில் பணியாள்கள் அமா்த்தலாம் எனவும், எளிமையாக நிா்வாகம் செய்யலாம் என சமூக ஆா்வலா்கள் கூறுகிறாா்கள்.
இந்த நகரை பேரூராட்சியாக மாற்றினால் மத்திய அரசு கிராம ஊராட்சிக்கு வழங்கும் நிதி நிறுத்தப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நிறுத்தப்படும் எனவும் இதனால் இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக சிரமம் அடைவாா்கள் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சியை மக்கள்தொகைக்கு ஏற்ப இரண்டாகப் பிரித்து ஊராட்சி நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கின்றனா்.