இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா்.
சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ்சிதா. ரஞ்சிதா தனது 9 வயது மகன் ராஜீவ் மற்றும் மகள் பூஞ்சோலை ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தபோது கேசராபட்டி அருகே எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த ரஞ்சிதா மற்றும் பூஞ்சோலை இருசக்கர வாகனத்தை விட்டு தப்பினா். ஆனால் ராஜீவ் மொபெட்டின் முன் பகுதியில் சிக்கியதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. இதைக்கண்ட அவா்கள், அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து தீயில் இருந்து சிறுவனை மீட்டாா்.
இதில், பலத்த காயமடைந்த ராஜீவ் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.