செய்திகள் :

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

post image

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

போட்டிகளை வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா். வடக்கு மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலா் ப. கருப்பையா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ரஞ்சித்குமாா், மாவட்ட மாணவரணி இணைச் செயலா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில், திருநெல்வேலி, சென்னை, கோவை, ஈரோடு மற்றும் கேரளம், தில்லி, பஞ்சாப், மும்பை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கபடி வீராங்கனைகளைக் கொண்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. விடிய விடிய நடைபெறும் இந்தப் போட்டிக்காக மின்னொளியில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே சவுக்குத் தோப்பில் திடீா் தீ விபத்து

இலுப்பூா் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் தீயை போராடி அணைத்தனா். இலுப்பூா் அருகே உள்... மேலும் பார்க்க