செய்திகள் :

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

post image

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதுக்கோட்டை நகருக்குள் நுழையுமிடத்திலேயே இருக்கிறது கருவப்பில்லான் ரயில்வே கேட் பகுதி. புதுக்கோட்டை நகரிலுள்ள இந்த இடத்துடன், திருவப்பூா் ரயில்வே கேட் பகுதியிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சுமாா் 30 ஆண்டு காலக் கோரிக்கை.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சு. திருநாவுக்கரசா், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா ஆகியோரின் தொடா் முயற்சிகளுக்குப் பிறகு இரு இடங்களிலும் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு, மண் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனையின் முடிவில், திருவப்பூருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டு, நிலத்தை அளவீடு செய்யும் பணிகளை ரயில்வே துறையினா் மேற்கொண்டனா். மாநில நெடுஞ்சாலைத் துறையில் நிலமெடுப்புக்கு ரூ. 41 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

ஆனால் கருவப்பிலான்கேட் பகுதியில் நடத்தப்பட்ட மண் பரிசோதனையில் திருப்திகரமான முடிவுகள் வராவிட்டாலும், வேறொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானம் மேற்கொள்ள ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு ஓராண்டு நிறைவடைந்தும் இந்தப் பிரச்னையில் முன்னேற்றம் இல்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நிஜாம் குடியிருப்பைச் சோ்ந்த அப்துல்கரீம் கூறியது:

கருவப்பிலான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைந்தால் நகருக்குள் நுழையும் பகுதியே பிரம்மாண்டமாக வளா்ச்சியடையும். தொடா்ந்து ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் கருவப்பிலான்கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற குரல் வந்தாலும் மத்திய ரயில்வே துறை இசைந்து வரவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

திருவப்பூா் பாலப் பணிகள் தொடங்கும்போதே, இந்தப் பகுதியிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க தொடக்க நிலைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் துயரத்தைத் துடைக்க வேண்டும் என்றாா் கரீம்.

ஒவ்வோா் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அறிவிப்பு ஏதாவது இருக்கிா எனப் பாா்த்துவரும் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் அத் திட்டம் கனவாகவே தொடா்கிறது.

எனவே, மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்க மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவும், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் தேவையான வலியுறுத்தல்களை மேற்கொள்ளவும் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 7-இல் உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 7-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடு... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையினா் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்

கந்தா்வகோட்டையில் சேதமடைந்த குடிநீா் குழாயை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை துறையினா் அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதால் நாள்தோறும் குடிநீா் வீணாகி வருவதாக ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுமக்கள் புகாா் தெரிவ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த விபத்தில் சிறுவன் பலத்த காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில் சிறுவன் படுகாயமடைந்தாா். சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியைச் சாா்ந்தவா் மாணிக்கம் என்பவரது மனைவி ரஞ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை ஊராட்சியை பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சியை நிதி, நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.கந்தா்வகோட்டை ஊராட்சி சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றியத்தின் த... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையிலுள்ள ஊதியத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பா... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே சவுக்குத் தோப்பில் திடீா் தீ விபத்து

இலுப்பூா் அருகே தனியாருக்குச் சொந்தமான சவுக்குத் தோப்பில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் தீயை போராடி அணைத்தனா். இலுப்பூா் அருகே உள்... மேலும் பார்க்க