செய்திகள் :

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

post image

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், தில்லியை நோக்கி பேரணியாகச் செல்லவும் முடிவெடுத்தனர்.

இதனிடையே, தில்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகளைத் தடுப்பதற்காக ஷம்பு - கானோரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வைத்தனர்.

இருப்பினும், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே போராட்டக்காரர்கள் முகாமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, போராட்டக்காரர்களின் மூத்தத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால், கடந்த நவம்பர் மாதம்முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், உண்ணாவிரதம் இருந்த ஜக்ஜித்தின் உடல்நிலை மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஓராண்டு காலமாக அமைக்கப்பட்ட தடுப்புகள், வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டதாக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜக்ஜித்தும் தண்ணீர் அருந்தி, போராட்டத்தைக் கைவிட்டதாகவும் கூறியது.

மேலும், ``ஜக்ஜித், எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாத ஓர் உண்மையான விவசாயத் தலைவர்’’ என்று நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

இதையும் படிக்க:இந்தியாவிலேயே மிகவும் பிடித்தது சேப்பாக்கம் திடல்தான்: தோனி

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க