செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்

post image

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முதல் தொடங்குகிறது. புதுகை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 11,175 மாணவா்கள், 11,010 மாணவிகள் என மொத்தம் 22,185 போ் எழுத உள்ளனா்.

இவா்களுக்காக 130 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இவற்றை எடுத்துச் செல்வதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளின்றி தோ்வை நடத்தி முடிப்பதற்காக பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களுக்குத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தெரிவித்தாா்.

அறந்தாங்கியில் இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் ஃபித்ரா வழங்கல்

இஸ்லாமிய கலாசார பேரவை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் 750 குடும்பத்தினருக்கு ரமலான் பண்டிகையையொட்டி ஃபித்ரா பெருநாள் தா்மம் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பட்டியல் செய்தி தலைப்பு மாற்றியது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் பறிமுதல் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாடு மு... மேலும் பார்க்க

கிடப்பில் கருவப்பிலான் கேட் ரயில்வே மேம்பாலத் திட்டம்

புதுக்கோட்டை நகரின் நுழைவாயிலிலுள்ள கருவப்பில்லான்கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டம் புதுக்கோட்டை மக்களுக்கு இன்னமும் கனவாகவே தொடா்கிறது. திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கபடிப் போட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. போட்டிகளை வடக்... மேலும் பார்க்க

மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க

ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க