செய்திகள் :

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால் மேலும் ஒரு கணவன் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைகளால் கணவன்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அது போன்ற ஒரு விபரீதம் நடப்பதை தடுக்க வாலிபர் ஒருவர் எடுத்துள்ள முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

கோரக்பூரை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை பப்லு என்பவர் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பப்லு கூலி வேலை செய்து வருகிறார். அவர் இதற்காக பக்கத்து மாநிலத்திற்கு சென்றார். ஆனால் அவரது மனைவி ராதிகா தனது கணவரின் ஊரான சண்ட் கபீர் நகரில் குழந்தைகளோடு வசித்து வந்தார்.

பப்லு வெளியூருக்கு வேலைக்குச் சென்ற நேரத்தில் ராதிகாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து பப்லுவிற்கு தெரிய வந்தது.

ராதிகா விகாஷை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களின் தொடர்பை உறுதிபடுத்த மனைவியிட்ம சொல்லாமல் பப்லு சொந்த ஊருக்கு வந்தார். ஊரில் வந்து அவர்களின் தொடர்பை உறுதிபடுத்திக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் எந்த வித சண்டையும் போடவில்லை. கேள்வியும் கேட்கவில்லை.

இது குறித்து ஊர் பெரியவர்களிடம் பப்லு பேசினார். தனது மனைவியை அவர் விரும்பும் நபருக்கே திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கொலை

ராதிகாவும் விகாஷை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அங்குள்ள சிவன் கோயிலில் இருவருக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். திருமணம் செய்து வைத்ததோடு அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

ராதிகாவின் குழந்தைகளும் திருமணத்தில் பங்கேற்றனர். பப்லு தனது மனைவியை அவர் காதலித்த நபருடன் திருமணம் செய்து வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இது குறித்து பப்லு கூறுகையில், ''சமீப காலமாக கணவன்கள் மனைவியால் படுகொலை செய்யப்படுகின்றனர். மீரட்டில் நடந்தது போன்ற சம்பவங்களை பார்த்த பிறகு எனது மனைவியை அவர் விரும்பும் காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தேன். இதன் மூலம் இருவரும் அமைதியாக வாழமுடியும். அதோடு எனக்கும் பிரச்னை ஏற்படாது''என்றார்.

ராதிகா மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தானே தனியாக வளர்த்துக்கொள்வதாகவும் பப்லு தெரிவித்துவிட்டார். பப்லு செய்த காரியத்தை பார்த்த கிராம மக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.

மீரட்டில் காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தின் அவுரியா நகரில் திருமணமாகி இரண்டே வாரத்தில் 22 வயதான பிரகதி என்ற பெண் தனது கணவனை தன் காதலன் துணையோடு ஆள் வைத்து சுட்டுக்கொலை செய்தார்.

அதற்கு முன்பு மீரட்டில் வசித்து வந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவன் ரஜபுத்திற்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து காதலன் துணையோடு கழுத்தை அறுத்து கொலை செய்து உடம்பை பல துண்டுகளாக வெட்டி சிமெண்ட் டிரம்பில் அடைத்து வைத்தார். அதோடு கொலையை கொண்டாட முஸ்கான் தனது காதலன் சாஹிலுடன் சிம்லாவிற்கும் சென்று வந்தார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க

Ramalan: `அவர்கள் நமக்கும் நாம் அவர்களுக்கும் செய்கிறோம்' நல்லிணக்கம் காக்கும் ரமலான் நோன்புக் கஞ்சி

இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால... மேலும் பார்க்க

5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்... மேலும் பார்க்க

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க