செய்திகள் :

5 ஸ்டார் ஹோட்டலில் இலவசமாக சாப்பிட முயன்று சிக்கிய Influencer; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

post image

டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர் ஒருவர், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இலவசமாக காலை உணவு சாப்பிட முயன்று மாட்டியதால், சாப்பிட்ட பஃபே சாப்பாட்டுக்கு 3,600 ரூபாய் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

நிஷு திவாரி, கள்ளத்தனமாக 5 ஸ்டார் விடுதியில் சாப்பிடுவதற்காக, அங்கே தங்கியிருக்கும் விருந்தினர் போல காட்டிக்கொள்ளும் விதமாக தூங்கும் ஆடைகளை அணிந்துகொண்டுள்ளார்.

வீடியோ எடுக்கும் நபருடன் சென்ற அவர், உணவு அறையில் இருந்த பணியாளரிடம் கற்பனையாக ஒரு அறை எண்ணைக் கூறியுள்ளார். அறை எண்ணைக் கேட்ட ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதித்தனர்.

நிஷு திவாரி

அதன் பிறகு தங்கள் திட்டத்தில் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டு அவரும், உடன் சென்ற நபரும் ஆடம்பரமான காலை உணவை சுவைத்துள்ளனர்.

சிக்கிய Influencer

வயிறார உணவருந்திவிட்டு இருவரும் உணவு அறையை விட்டு வெளியேறும்போது, ஹோட்டல் ஊழியர்கள் இருவரையும் மறித்து கேள்வி கேட்டனர்.

அவர்கள் நிஷு கூறிய அறை எண்னை மறுபடியும் சரிபார்த்தனர். ஆரம்பத்தில் அவர்களை சமாளிக்க முயன்ற இன்ஃபுளூயன்சர், பின்னர் தான் ஹோட்டல் விருந்தினர் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

அவர் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் அவரிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஹோட்டல் ஊழியர்கள் அவரை விட்டனர். அவர் 3,658 ரூபாய் பணம் செலுத்தினார். அவரது வீடியோவின் தலைப்பில், "இலவச உணவு காஸ்டலியான உணவாக மாறிவிட்டது" என எழுதியுள்ளார்.

நெட்டிசன்கள் ரியாக்ஷன்

இந்த வீடியோவுக்கு 1.7 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. எனினும் பிராங்க் வீடியோக்களின் எல்லை குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது இந்த வீடியோ!

கள்ளத்தனமான செயலை காமெடியாக வீடியோ எடுப்பதும், பார்வையாளர்களுக்கு அத்தகைய சிந்தனையை பரப்புவதும் சரியானதல்ல என நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.

இது நகைச்சுவை அல்ல என்றும், அவமானகரமானது என்றும் கமண்ட் செய்துள்ளனர். வைரல் வீடியோக்களுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்த உங்கள் கருத்துக்களை கமண்ட் செய்யுங்கள்!

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க

UP: ``மீரட் சம்பவம் போல நடக்க கூடாது'' - மனைவியை அவர் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களில் தொடர்ந்து மனைவியால்... மேலும் பார்க்க

Ramalan: `அவர்கள் நமக்கும் நாம் அவர்களுக்கும் செய்கிறோம்' நல்லிணக்கம் காக்கும் ரமலான் நோன்புக் கஞ்சி

இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால... மேலும் பார்க்க

தந்தை இறப்பு செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம்; ஒன்றாக நடந்த இறுதிச்சடங்கு - கான்பூரில் சோகம்

தந்தையின் இறப்பு செய்தி கேட்டு மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கான்பூரில் அரங்கேறி உள்ளது.கான்பூரைச் சேர்ந்த லைக் அகமது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று... மேலும் பார்க்க

``சிறையில் ஒன்றாக இருக்க அனுமதியுங்கள்..'' - கணவனை கொன்ற மீரட் ஜோடி போதைப்பொருள் கேட்டு பிடிவாதம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை முஸ்கான் என்ற பெண் தனது புதிய காதலன் சாஹிலுடன் சேர்ந்து இம்மாத தொடக்கத்தில் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க