செய்திகள் :

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!

post image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே தோல்வியடைந்ததால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஜாரா கூறியதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸின் பலத்தை கவனத்தில் கொண்டு எப்போதும் போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகும் நிலையில், சேப்பாக்கம் திடலில் விளையாடுவதால் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் இல்லை என ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறுவது ஆச்சரியமளிப்பதாக புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிக்க: தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த ஒரு குறையும் கூற முடியாது. தங்களது பலத்துக்கு ஏற்றவாறே சிஎஸ்கே அணிக்கான ஆடுகளம் தயார் செய்யப்படுகிறது. சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் கிடையாது என ஃபிளெமிங் கூறுவது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையில் நிறைய விஷயங்களுக்கு கவனம் கொடுக்கப்பட வேண்டும். ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டினை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறுகிறார்கள். அணியின் மிடில் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும். சிஎஸ்கே அணி வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும். சிஎஸ்கேவில் டாப் ஆர்டர் நன்றாக இருக்கிறது. அவர்கள் சரியாக விளையாடத் தவறும் பட்சத்தில் மிடில் ஆர்டர் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. ஆனால், சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் அதற்கு முழுவதும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: கொல்கத்தா அணியில் சுனில் நரைன்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

நம்பமுடியாத ஆட்டம்; நிதீஷ் ராணாவுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதீஷ் ராணா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடியதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கி... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வி... மேலும் பார்க்க