செய்திகள் :

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

post image

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.

ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம், புழல், வியாசர்பாடி, ராயப்பேட்டை, பூந்தமல்லி, மதுரவாயல், திருமுல்லைவாயில் என பல்வேறு இடங்களுக்குமானதாக சென்னையில் மட்டும் மாதவரம் பகுதியில் உள்ளது முக்கிய சந்தை.

ஆனால், ஒரு சில நாள்களே உள்ள நிலையில், தற்போது வரை சுமார் 3,000 ஆடுகள் மட்டுமே விற்பனையாகியிருப்பதாகவும், 30,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து இங்கு விற்பனைக்கு வைத்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் வரை விற்பனை களைகட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும் என நினைத்து வந்த வியாபாரிகள் இந்த சந்தையில் தற்போதுவரை விற்பனை மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதால் ஆட்டுச் சந்தைக்கு வந்திருக்கம் வியாபாரிகள் மன குமுறலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக வியாபாரம் செய்ய சென்னைக்கு வந்திருக்கக் கூடிய வியாபாரிகள், இதுவரை விற்பனை சூடுபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். வெயில் காரணமாக இருக்கலாம், அல்லது வார இறுதி நாள்களில் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்பிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இஸ்லாமியர்களின் முக்கிய ரமலான் பண்டிகைக்காக இன்று மட்டும் 80 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மனவேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க