செய்திகள் :

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

post image

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் 1 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட கோவை பிரதான சாலை, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தினர் தற்போது தங்களது நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வங்கியில் கடன் பெறவோ இயலாமல் தடை விதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், அவிநாசி ரத வீதிகள் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவிநாசியில் நடைபெற்றது.

இதையடுத்து வியாபாரிகள் கூறியதாவது,

''அவிநாசி மேற்கு ரத வீதியில் 85- டி மற்றும் 85 -இ திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என இந்து அறநிலையத் துறையினர் தடைச் சான்று பெற்றுள்ளனர்.

ஆனால், இதில் 85-டி யில் உள்பிரிவு 427-9 மற்றும் 85-இல் உள் பிரிவு 433-21 மட்டுமே கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரியவருகிறது.

இருப்பினும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக மற்ற நிலங்களுக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை விதிக்கின்றனர். இதனால் வங்கிக் கடன் கூட பெற முடியாமலும், தொழிலை மேம்படுத்த முடியாமல் உள்ளோம்.

ஆகவே, கோயில் நிலத்தை தவிர மீதமுள்ள நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்கி, பத்திரப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இருப்பினும் திருமுருகன்பூண்டி இந்து சமய அறநிலையத் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடைச் சான்றை உடனடியாக நீக்கி தடையின்மை சான்று வழங்கக் கோரி, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலர் அலுவலகம் முன் ஏப்ரல் 1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்'' என்றனர்.

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க