செய்திகள் :

நடுரோட்டில் நடனமாடிய மனைவி; சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் நடவடிக்கை

post image

சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்கே பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

சண்டிகரில் ஒரு பெண் அது போன்று ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது கணவரின் வேலைக்கு குழி பறித்துவிட்டார்.

சண்டிகரில் சீனியர் கான்ஸ்டபிளாக இருப்பவர் அஜய். இவரது மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் ஜோதிக்கு அதிக ஈடுபாடு உண்டு. தனது மைத்துனி பூஜாவுடன் ஜோதி அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுள்ளார். வரும்போது முக்கிய சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக வாகனங்கள் காத்து நின்றது.

அந்த நேரம் ஜோதி தனது மைத்துனியிடம் சொல்லி நான் நடனமாடுகிறேன். வீடியோ எடு என்று சொல்லி விட்டு சாலை சிக்னல் ஜிப்ரா கிராஸிங்கில் பிரபலமான ஒரு இந்தி பாடலுக்கு ஜோதி நடனமாடினார். அவர் நடனமாடியதை பூஜா வீடியோ எடுத்தார்.

இதனால் வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் அப்படியே சாலையில் நின்றன. வாகன ஓட்டிகள் நடனத்தை கண்டுகளித்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஜோதி தான் ஆடிய வீடியோவை தனது கணவர் அஜயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ உடனே வைரலானது. இது போலீஸாரின் கவனத்திற்கு சென்றது. தலைமை கான்ஸ்டபிள் ஜஸ்பிர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார்.

நடுரோட்டில் பெண் நடனம்

இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூராக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக ஜோதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வீடியோ அஜய் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியிடப்பட்டு இருந்ததால் அஜய் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜோதி மற்றும் பூஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மனைவியின் செயலுக்கு கணவன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். சிலர் ஜோதி செய்தது ஒன்றும் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ரத்தன் டாடா உயில்: சமையல்காரர், உதவியாளர், பணியாளர்கள், நண்பர்கள்... யாருக்கு என்ன கிடைக்கும்?

தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில்தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறக்கும் முன்பு உயில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் ரூ.3900 கோடி மதிப்புள்ள சொத்துகளை ... மேலும் பார்க்க

`பாவம், கொல்லாதீங்க..' - பாதயாத்திரையில் 250 கோழிகளை மீட்ட ஆனந்த் அம்பானி! என்ன செய்தார் தெரியுமா?

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தற்போது குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து துவாரகா கோயிலுக்கு 140 கி.மீ நடந்து பாதயாத்திரையாக புனித பயணம் மேற்கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் நடைபயண... மேலும் பார்க்க

``கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்'' - 140 கி.மீ துவாரகா பாதயாத்திரையில் ஆனந்த் அம்பானி உருக்கம்

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. மிகப்பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் உலக தலைவர்கள் என ப... மேலும் பார்க்க

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டைகர் மேமன் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தது. மும்பையில் டைகர் மேமன் குடும்பத்திற்க... மேலும் பார்க்க

UP: 17 ஆண்டுகளுக்குப் பிறகு வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட கத்தரிக்கோல்; உபி பெண்ணுக்கு என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பெண் ஒருவர், சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு 17 ஆண்டுகளாகத் தனக்கே தெரியாமல் அறுவை சிகிச்சை கத்தரிக்கோலை வயிற்றில் சுமந்துள்ளார். பிப்ரவர... மேலும் பார்க்க

Viral Song: "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா" - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும், "அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா... " என்ற பாடல் பிரபலமாக அனைத்து இடங்களிலும் ஒலித்து வருகிறது.'அணன் ட்ட பத் சயே, அப்பத் ட்ட... மேலும் பார்க்க