செய்திகள் :

`பாலியல் வன்கொடுமை முயற்சி' - ஓடும் ரயிலிலிருந்து குதித்த இளம் பெண்! - என்ன நடந்தது?

post image

ஹைதராபாத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 23 வயது பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவு டெலிவரி செய்யும் வேலை செய்யும் 23 வயதுப் பெண் ஒருவர் தன்னுடைய பழுதான போனை சரிசெய்வதற்காக மேட்சலிலிருந்து செகந்திராபாத்துக்கு சென்றிருக்கிறார். வந்த வேலை முடிந்ததும் மதியம் 1 மணியளவில், உள்ளூர் ரயிலில் மீண்டும் மேட்சலுக்கு செல்வதற்காக பெண்கள் பெட்டியில் ஏறியிருக்கிறார். அப்போது அந்தப் பெட்டியில் சில பெண்கள் இருந்திருக்கின்றனர்.

பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

இரவு 8.15 மணியளவில், அல்வால் நிறுத்தத்தில் பெட்டியில் இருந்த பெண் பயணிகள் இறங்கிவிட்டனர். அதைத் தொடர்ந்து பெட்டி காலியாகிவிட்டது. அப்போது, ஒரு மெலிந்த, கருமை நிறம்கொண்ட ஆண், பெட்டிக்குள் நுழைந்து, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அந்தப் பெண், அவனை தள்ளிவிட்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

அதனால், அந்தப் பெண்ணின் தலை, முகம், கழுத்து, வலது கை மற்றும் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த வழியாக வந்த ஒருவர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அவருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையிடம், 'தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரை அடையாளம் காண முடியும்" எனக் கூறியுள்ளார்.

காவல்துறை
காவல்துறை

பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவு 131 (தாக்குதல் அல்லது குற்றவியல் பலவந்தத்திற்கான தண்டனை) மற்றும் 71 (மீண்டும் மீண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைக் கவனத்தில் கொண்ட, தெலுங்கானா எதிர்க்கட்சித் தலைவர் கே.டி.ராமராவ், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்' கட்டாயப்படுத்திய ஆசிரியை - போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மத... மேலும் பார்க்க

இன்ஸ்டா நண்பனை சந்திக்க வீட்டை விட்டுச் சென்ற மாணவிகள்... வக்கீல் உள்பட 2 பேர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது தங்கையான 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆகியோர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை கண்டுபிடித்து... மேலும் பார்க்க

``5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை” - போக்சோவில் இருவர் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரகத்திற்கு உள்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, வயது 10. இந்த மாணவி பள்ளியில் அடிக்கடி சோர்வாக இருந்துள்ளார். இதை... மேலும் பார்க்க

கோவை: போதைப் பழக்கம், பாலியல் அத்துமீறல், வழிப்பறி... பதற வைக்கும் கல்லூரி மாணவர்கள்.. தீர்வு என்ன?

கோவையில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர், சிறு குறு நிறுவனங்களில் இதயம் என்று தொழில் நகரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான கல்வி நிறுவனங்களின் ... மேலும் பார்க்க