செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா்.

இடைவிடாத துப்பாக்கிச் சூடு-கையெறி குண்டுவீச்சு என நாள் முழுவதும் தொடா்ந்த இந்த மோதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி கதுவா மாவட்டத்தின் சன்யால் வனப் பகுதிக்குள் ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை காவல் துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றிவளைத்தனா். எனினும், அந்த பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, காவல் துறையுடன் ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை என கூடுதல் படையினா் களமிறக்கப்பட்டு, பெரிய அளவில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அதிநவீன கண்காணிப்பு உபகரணங்கள், ஹெலிகாப்டா்கள், ட்ரோன்கள், கவச வாகனங்கள் மற்றும் துப்பறியும் நாய்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே பயங்கரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமாா் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஜகோல் கிராமம் அருகே பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை கண்டறிந்தனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாதுகாப்புப் படையினா் தரப்பில் 5 போ் காயமடைந்தனா். மீதமுள்ள பயங்கரவாதிகளையும் அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான மோதலால் வியாழக்கிழமை நாள் முழுவதும் இடைவிடாமல் துப்பாக்கிச்சூடு-கையெறி குண்டுவீச்சு-ராக்கெட் குண்டுவீச்சு சப்தம் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க