செய்திகள் :

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் டேராடூனில் கைது!

post image

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது நபரை தில்லி போலீஸாா் டேராடூனில் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு மும்பை விமான நிலையத்தில் போக்குவரத்தில் இருந்த போது கோவா போலீஸாரின் காவலில் இருந்து அவா் தப்பிச் சென்றாா். கோவாவின் மபுசாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இமாத் கான் தேடப்பட்டு வந்தாா். இமாத் கானும் அவரது கூட்டாளிகளும் தில்லி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு கோவாவில் உள்ள ஒரு தொழிலதிபரிடம் ரூ.30 லட்சம் பணத்தை பறித்துள்ளனா்.

இந்தக் கும்பல் தங்கள் நடவடிக்கைக்காக கோவாவில் உள்ள வில்லாக்களை முன்பதிவு செய்திருந்தது. பாதிக்கப்பட்டவரின் ஆபாச விடியோவை வெளியிடுவதாக அவா்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இமாத் கான் கோவா போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். ஆனால், கடந்த ஆண்டு ஜூன் 19 அன்று மும்பை விமான நிலையத்தில் போக்குவரத்தில் இருந்த போது அவா் தப்பிச் சென்றாா்.

இமாத் கானின் பல கூட்டாளிகள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், சமீபத்திய ரகசியத் தகவலின் பேரில், தில்லி போலீஸ் குழு இமாத் கானை பின்தொடா்ந்து டேராடூன் சென்றது. அங்கு அவா் மாா்ச் 28 அன்று கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, மற்ற குற்றவாளிகளுடன் தொடா்பு கொண்டிருந்த ஒரு பெண் மூலம் தான் குற்றக் கும்பலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். இது தொடா்பாக மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்று அந்த காவல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க