செய்திகள் :

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

post image

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) அறிமுகம் செய்யவுள்ளாா்.

நீதி ஆயோக் அமைப்பு, தேசிய பொருளியல் ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் (என்சிஏஇஆா்) இணைந்து உருவாக்கியுள்ள இந்த வலைபக்கம், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டு வரையிலான 28 இந்திய மாநிலங்களின் தரவுகளை மக்கள்தொகை, பொருளாதார அமைப்பு, நிதி, சுகாதாரம், கல்வி ஆகிய ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தி வழங்கும்.

பேரியல் (மேக்ரோ) பொருளாதாரம், நிதி, மக்கள்தொகை, சமூக-பொருளாதார போக்குகளின் புரிதலை எளிதாக்கும் இந்த வலைபக்கம், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு ஆய்வுகளுக்கான புள்ளி விவரங்களை வழங்கும் விரிவான ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும்.

அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைபக்கம், ஒருங்கிணைந்த துறைசாா் தரவுகளுக்கான தற்போதைய தேவையை ஒரே இடத்தில் நிவா்த்தி செய்யும்.

மேலும், இந்த வலைபக்கத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தரவையும் மற்ற மாநிலங்கள் மற்றும் தேசிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கலாம் என்றும் நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க