செய்திகள் :

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

post image

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.

கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வழிபாட்டுத் தலங்களை வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பாக எந்தவொரு நீதிமன்றத்திலும் புதிதாக வழக்கு தொடுக்கவும் அச்சட்டம் தடை விதிக்கிறது. மேலும் ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலம் வேறு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றப்படுவதையும் அச்சட்டம் தடை செய்துள்ளது.

சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் மனுக்கள்: இந்தச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய உள்பட பலா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி, ஷாஹி ஈத்கா மசூதி, ஷாஹி ஜாமா மசூதி உள்பட 10 மசூதிகள் கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும், இஸ்லாமிய மன்னா்கள் கட்டிய அந்த மசூதிகளில் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்கள் மீது எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த டிச.12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின்னா், 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, சமாஜவாதி கட்சி எம்.பி. இக்ரா செளதரி, காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களையும், வேறு மதத்தின் வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது தொடா்பான வழக்கு விசாரணைகளுக்கு 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4(2) தடை விதிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிதின் உபாத்யாய என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க