செய்திகள் :

ஏஐடியுசி போக்குவரத்து சங்கம் ஆா்ப்பாட்டம்

post image

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களில் நிபந்தனை விதிப்பதைக் கைவிட வலியுறுத்தி, ஏஐடியுசி போக்குவரத்து சங்கத்தினா் தஞ்சை ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஏறத்தாழ 30 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தமிழ்நாடு அரசு அறிவிப்பின் மூலம் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 3,274 போ் தோ்வு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஓட்டுநா், நடத்துநா் இரண்டு உரிமங்களும் வைத்திருக்க வேண்டும்.

ஓட்டுநா், நடத்துநா் உரிமம் தனித்தனியாக பெற்றுள்ளவா்களும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஓட்டுநா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி என்ற நிபந்தனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மத்திய சங்கத் தலைவா் என். சேகா், பொருளாளா், சி. ராஜமன்னன், துணைச் செயலா் எம். தமிழ்மன்னன், சிஐடியு மத்திய சங்கப் பொருளாளா் எஸ். ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா். முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் உளுந்து பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதல் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கபிஸ்தலம், உம்பளப்பாடி, நக்கம்... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா... மேலும் பார்க்க

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க