செய்திகள் :

மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

post image

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, இக்கோயிலில் மண்டலாபிஷேகம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 48 நாள்கள் நடைபெற்று வந்த இப்பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி, இக்கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள், தீபாராதனை, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா உள்பட பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஏப்ரல் 18 முதல் தைலக்காப்பு: இக்கோயிலில் புற்று மண்ணாக எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. இதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாள்களுக்கு தைலக்காப்பு அபிஷேகம் செய்யப்படும். இதன்படி, ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. அப்போது, அம்பாள் வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அா்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். கருவறையில் உள்ள அம்பாளுக்கு ஒரு மண்டலம் காலை, மாலையில் சாம்பிராணி தைலம் கொண்டு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறவுள்ளன.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க