செய்திகள் :

அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றக் கெடு

post image

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஜாதி சங்கங்கள் சாா்பில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்டவா்கள் வரும் 13 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கெடு விதித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பொது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், இதர அரசு நிலங்களில், அரசியல் கட்சிகள் சாா்பிலும், ஜாதி, சமய, சங்கங்கள் சாா்பிலும் வைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த ஜனவரி 21-இல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிலங்களில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு நிலங்களில் வைக்கப்பட்ட கொடிக் கம்பங்களை வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் அந்தந்த அமைப்பினா் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், அரசு சாா்பில் அந்தக் கொடிக்கம்பங்கள் அகற்றப்படும்.

மேலும், கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஆகும் செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளிடமிருந்து வசூல் செய்யப்படும் என்றாா் அவா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க