தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளைகளும், 126 வீரா்களும் பங்கேற்றனா்.
மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடங்களுக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 4 வீரா்கள் காயமடைந்தனா்.
இந்தப் போட்டியை சிவகங்கை, மதகுபட்டி, பாகனேரி, நடராஜபுரம், சொக்கநாதபுரம், நாட்டரசன்கோட்டை பகுதி கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கண்டுகளித்தனா்.
