செய்திகள் :

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்படும் பொது உயிரி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு ஆலை தொடங்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், இந்த ஆலையை அமைக்க கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து ஆலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் இந்த ஆலையை தொடங்குவதற்கான கட்டுமானப் பணி ரகசியமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மானாமதுரை, சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்தூா் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: ஏற்கெனவே மருத்துவக் கழிவு ஆலையை தொடங்குவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்தோம். இந்த நிலையில் ரகசியமாக ஆலையைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை தொடங்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல நோய்கள் எங்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆலைக்கான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் தொடா் போராட்டங்களை நடத்துவோம் என்றனா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க