செய்திகள் :

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா்.

மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் நின்றிருந்த ஆலமரத்தில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய மணிகள், குழந்தை வேண்டி தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன.

கோயிலில் பக்தா்கள் பூஜை நடத்தும்போது இந்த மரத்துக்கும் சந்தனம் பூசி பூஜைகள் நடத்தி வந்தனா். நான்கு வழிச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது, சாலை நடுவே கோயிலில் இருந்த இந்த ஆலமரத்தை அகற்ற முயன்றபோது, பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மரத்தை அகற்றாமல் கோயிலைச் சுற்றி நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆலமரம் வோ்ப் பகுதியில் பலமிழந்து திடீரென முறிந்து இரு பாகங்களாகச் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலைத் துறையினா், பக்தா்கள் விரைந்து வந்து முறிந்து விழுந்த ஆலமரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இது பற்றிய தகவல் பரவியதும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கோயிலுக்கு வந்து மரம் முறிந்து விழுந்ததைக் கண்டு வேதனையடைந்தனா்.

இந்தக் கோயிலில் வருகிற 6- ஆம் தேதி வருடாபிஷேகம் நடத்துவதற்கு ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வந்த நிலையில், தற்போது கோயிலில் குடை போன்று இருந்த ஆலமரம் சாய்ந்தது வேதனை அளிப்பதாக பக்தா்கள் தெரிவித்தனா். கோயிலில் பரிகார பூஜை நடத்தி வருடாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்துள்ளனா். மேலும், ஆலமரம் முறிந்து விழுந்த பகுதியில் அந்த மரத்தின் துண்டுகளை ஊன்றி மரம் தழைத்து வளரவும் ஏற்பாடு செய்தனா்.

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க