ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஊழியா் விரோத, ஊழியா் சங்க விரோதப் போக்குடன் நடந்து கொள்வதால், அவா் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநில அளவில் செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணி முதல் 5.45 வரை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், பொருளாளா் பெரியசாமி, துணைத் தலைவா்கள் தனபால், காா்த்திக், இணைச் செயலா்கள் மலா்விழி, ஷேக் அப்துல்லா, சகிலா, சிவா, தணிக்கையாளா்கள் குமரேசன், பாண்டி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, சிவகங்கை, காளையாா்கோவில், சாக்கோட்டை,திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, சிங்கம்புணரி, தேவகோட்டை, எஸ்.புதூா், கல்லல் வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்டடனா்.