ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
அய்யலூா் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரமலான் பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மூலம் ரூ.2 கோடிக்கு வியாழக்கிழமை வா்த்தகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு, திண்டுக்கல் மட்டுமன்றி திருச்சி மாவட்டம், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அய்யலூா் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வருகின்றனா். வருகிற திங்கள்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ள நிலையில், அய்யலூா் சந்தையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ஆடுகள் விற்பனை மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.