`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்தல்
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வரும் தமிழ் ஆண்டான விசுவாவசு வரவுள்ளதையடுத்தும், தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதித் திருநாளையொட்டியும் நடைபெற்ற இந்த நிகழ்வின் முன்னதாக சாயரட்சையின் போது பெரியநாயகியம்மன், வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி, கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன் பஞ்சாங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பிறகு விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கத்தை செல்வசுப்ரமண்ய குருக்கள் படித்து விளக்கமளித்தாா். மழை பெய்யும் காலம், விவசாய செழிப்பு, இயற்கை சீற்றங்கள் குறித்து அவா் விவரித்தாா்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, விழாக் குழு நிா்வாகிகள் சாய்கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா் கீதா, அரிமா சுப்புராஜ், பெரியராஜ், மனோகா், கோபால் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு நீா்மோா், பிரசாதங்கள், சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன.
மலைக் கோயிலில் பக்தா்கள் கூட்டம்: பழனி மலைக் கோயிலில் யுகாதி திருநாள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் படிவழி, விஞ்ச், ரோப்காா் வழியாக மலையேறினா். அனைத்து கட்டண தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இவா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்த பட்சம் மூன்று மணி நேரமானது. அன்னதானம், இலவச பஞ்சாமிா்த வரிசையிலும் திரளான பக்தா்கள் காத்திருந்தனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் சின்னக்குமாரசாமியை மின்னொளி அலங்காரத்தில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.