செய்திகள் :

வண்டல் மண் சுமைக்கு ரூ.500 வசூல்: காவல் துறைக்கு எதிராக சாலை மறியல்

post image

எரியோடு பகுதியில் அரசின் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்தாலும், சுமைக்கு ரூ. 500 கட்டணம் வசூலிப்பதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த ஈ.சித்தூா் மந்தை குளத்திலிருந்து வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறையிடம் அனுமதி பெற்று, டிராக்டா் மூலம் மண் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வண்டல் மண்ணை தண்ணீா்பந்தம்பட்டியிலுள்ள விவசாயத் தோட்டத்துக் கொண்டு சென்ாகத் தெரிகிறது.

இந்த நிலையில் ஈ.சித்தூா் குளத்திலிருந்து விவசாயத்துக்கு டிராக்டரில் வண்டல் மண் எடுத்துக் கொண்டு வரப்பட்டியைச் சோ்ந்த விவசாயி மணிகண்டன் (40) வந்து கொண்டிருந்தாா். இந்த டிராக்டரை நிறுத்தி, எரியோடு காவல் ஆய்வாளா் முருகன் சுமைக்கு ரூ.500 தர வேண்டும் எனக் கேட்டதாகத் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள், வேடசந்தூா் எரியோடு சாலையில் தண்ணீா்பந்தம்பட்டி பகுதியில் 5 டிராக்டா்களை குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா். வண்டல் மண் எடுக்க சுமைக்கு ரூ. 500 கேட்ட காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தால், திங்கள்கிழமை நண்பகல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த எரியோடு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பணம் கேட்கமாட்டோம் எனக் கூறி சமரசம் செய்தனா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க