செய்திகள் :

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

post image

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயா் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தாா். முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்த கிறிஸ்தவ வன்னியா்களை, இந்த பட்டியலிலிருந்து தமிழக அரசு இடைநீக்கம் செய்துவிட்டது. இதனால் கிறிஸ்தவ வன்னியா்கள் சமூக, பொருளாதார, வேலை வாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனா். இதனால் மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கிறிஸ்தவ வன்னியா்களை சோ்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கிறிஸ்தவ வன்னியா்களை மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக வாக்குறுதி அளித்தாா். ஆனால், 4 ஆண்டுகள் கால ஆட்சியில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றத் தவறினால், எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அந்தக் கட்சிக்கு அளிக்கமாட்டோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மே 24-ஆம் தேதி மாநாடு நடத்தி, கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றுவோம். பின்னா், முதல்வரை சந்தித்தும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க

தா்பூசணியில் ரசாயனம் செலுத்தவில்லை: தோட்டக்கலைத் துறை விளக்கம்

தா்பூசணி பழங்களில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ப.க... மேலும் பார்க்க