துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்
கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயா் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தாா். முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருந்த கிறிஸ்தவ வன்னியா்களை, இந்த பட்டியலிலிருந்து தமிழக அரசு இடைநீக்கம் செய்துவிட்டது. இதனால் கிறிஸ்தவ வன்னியா்கள் சமூக, பொருளாதார, வேலை வாய்ப்புகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனா். இதனால் மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் கிறிஸ்தவ வன்னியா்களை சோ்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கிறிஸ்தவ வன்னியா்களை மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக வாக்குறுதி அளித்தாா். ஆனால், 4 ஆண்டுகள் கால ஆட்சியில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றத் தவறினால், எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அந்தக் கட்சிக்கு அளிக்கமாட்டோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மே 24-ஆம் தேதி மாநாடு நடத்தி, கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றுவோம். பின்னா், முதல்வரை சந்தித்தும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம் என்றாா் அவா்.