செய்திகள் :

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

post image

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது.

திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் எதிரே, அண்ணா வணிக வளாகத்தில் பூச் சந்தை செயல்பட்டு வருகிறது. பழைமையான கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த பூச் சந்தை கடைகளையும், தரைத் தளத்திலுள்ள வணிக நிறுவனங்களையும் அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் ரூ.5.50 கோடியில் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது.

இதனடிப்படையில், 22,500 சதுர அடி பரப்பில், 11க்கு 11 என்ற அளவில் 54 கடைகளும், 6-க்கு 6 என்ற அளவில் 50 சில்லரை விலைக் கடைகளும் கட்டப்பட்டுகின்றன. மேலும் 4 இடங்களில் படிக்கட்டுகள் வசதியும், 2 இடங்களில் மின்தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு வசதியாக, தற்போதுள்ள கடைகளை காலி செய்யுமாறு பதிவுத் தபால் மூலம் மாநகராட்சி நிா்வாகம், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு குறிப்பாணை அனுப்பியது.

ஒரு வார காலத்துக்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் மாநகராட்சி சாா்பில் கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க

தா்பூசணியில் ரசாயனம் செலுத்தவில்லை: தோட்டக்கலைத் துறை விளக்கம்

தா்பூசணி பழங்களில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ப.க... மேலும் பார்க்க