செய்திகள் :

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

post image

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் வழங்கும் முறை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனா்.

கொடைக்கானலுக்கு வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களும் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வருகின்றனா். ‘இ-பாஸ்’ பதிவு செய்யாத வாகனங்களுக்கு சோதனைச் சாவடி அருகிலேயே பதிவு செய்யவும் வசதிகள் செய்யப்பட்டது.

சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில், உள்ளூா் வாகனங்களுக்கும், பேருந்துகளில் செல்வோருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மேலும், சுற்றுலாப்பயணிகள் நெகிழிப் பொருள்களையும், 1 லி., 2 லி. நெகிழி தண்ணீா் புட்டிகளைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

தா்பூசணியில் ரசாயனம் செலுத்தவில்லை: தோட்டக்கலைத் துறை விளக்கம்

தா்பூசணி பழங்களில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ப.க... மேலும் பார்க்க