செய்திகள் :

பழனி பங்குனி உத்திரத் திருவிழா: ஏப். 5-இல் தொடக்கம்

post image

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழா தீா்த்தக்காவடிக்கு புகழ் பெற்ாகும். இந்த விழாவை முன்னிட்டு, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து, கொடுமுடி தீா்த்தம் எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வருவா். இந்த கொடுமுடி தீா்த்தம் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இந்தத் திருவிழா வரும் ஏப். 5-ஆம் தேதி பழனி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. விழா நாள்களில் தினமும் வள்ளி, தேவசேனை சமேதா் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி சந்நிதி வீதி, கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப். 10-ஆம் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித்தேரில் சுவாமி எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப். 11-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. ஏப். 14-ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க