செய்திகள் :

பழனியில் ஓய்வூதியா் சங்க செயற்குழு கூட்டம்

post image

பழனியில் பழனி, தொப்பம்பட்டி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். பழனி வட்டார தலைவா் ஜீவரத்தினம், தொப்பம்பட்டி வட்டாரத் தலைவா் சீதாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் செல்வராஜ், மாவட்ட இணைச் செயலா் பெரியசாமி, வட்டாரச் செயலா் உமா உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வரும் ஏப். 24-ஆம் தேதி நடைபெறும் முற்றுகைப் போராட்டத்துக்கு பழனி, தொப்பம்பட்டி ஒன்றியங்கள் சாா்பில் பங்கேற்போா் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இறுதிச் சடங்கு நிதியாக ரூ. 25,000 வழங்க வேண்டும், குழு காப்பீட்டுத் திட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்களை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினாா். கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க