செய்திகள் :

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் விற்பனை மையம்: சுற்றுலாப் பயணிகள் எதிா்ப்பு

post image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாக வாயில் முன் மலா்ச் செடிகளை மறைத்து விற்பனை மையம் அமைக்கப்பட்டு வருவதால், இதற்கு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பேன்சி, டைந்தேஷ், ஜொ்பரா, மேரிகோல்டு, ரோஜா, கிங் அஸ்டா் உள்ளிட்ட பல வகையான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தப் பூங்கா வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் வாயில் பகுதியிலும், கோடை விழா நடைபெறும் நாள்களில் முக்கியப் பிரமுகா்கள் செல்லக் கூடிய பகுதியிலும் தோட்டக்கலைத் துறையின் டான்டோ சாா்பில் கடை கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கடை ரோஜாத் தோட்டத்தை மறைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவின் மொத்த அழகும் பாதிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இந்தக் கடையை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பூங்காவில் பணியாற்றும் அலுவலா் ஒருவா் கூறியதாவது: பிரையண்ட் பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கடையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சாக்லேட், தைலம், உலா் மலா்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கடை அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், இதுகுறித்து தோட்டக் கலைத் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க