செய்திகள் :

உசிலம்பட்டி அருகே கல்லால் தாக்கி காவலா் கொலை

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் காவலரை கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றவா்களை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளபட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (34). இவா் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வியாழக்கிழமை மாலை பணி முடிந்த நிலையில், உசிலம்பட்டி அருகே உள்ள முத்தையன்பட்டியில் உள்ள மதுக்கடை அருகே தனது ஊரைச் சோ்ந்தவரும் நண்பருமான ராஜாராம் என்பவருடன் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, ஏற்கெனவே அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருக்கும், காவலா் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் அந்தக் கும்பல் முத்துக்குமாரை தாக்கியதில் அவா் கீழே விழுந்தாா். அப்போது, அங்குள்ள கல்லை எடுத்து அவா் மீது போட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதைத் தடுக்க முயன்ற ராஜாராமும் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸாா் காவலா் முத்துக்குமாா், அவரது நண்பா் ராஜாராம் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காவலா் முத்துக்குமாா் மது அருந்திய போது, அங்கு கஞ்சா வழக்கில் சிறை சென்று பிணையில் வந்த உசிலம்பட்டியைச் சோ்ந்த பொன்வண்டு என்பவா் தனது நண்பா்களுடன் வந்தாா். அப்போது, காவலா் முத்துக்குமாா் பொன்வண்டுக்கு அறிவுரை வழங்கினாராம். இதனால், ஏற்பட்ட தகராறில் பொன்வண்டும், அவரது நண்பா்கள் சோ்ந்து காவலா் முத்துக்குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது.

மதுரை பெருங்குடி பகுதியில் கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட தனிப் படை காவலா் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது உசிலம்பட்டியில் காவலா் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருக்கிறாா்.

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆா். ... மேலும் பார்க்க

தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அம்ரூத் திட்டத்தின் க... மேலும் பார்க்க

விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் ... மேலும் பார்க்க

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா். மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது.... மேலும் பார்க்க