செய்திகள் :

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், மதுரை நகரின் முக்கியச் சாலைகள், சந்திப்புகள், அடிக்கடி குற்றச் செயல்கள் நடக்கக்கூடிய இடங்கள், வைகை ஆற்றின் கரையோர சாலைகள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சனிக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற வாகனச் சோதனையில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். மேலும், நகரில் உள்ள 17 சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்பட்டு வாகனங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டியது போன்ற விதிமீறல்கள் குறித்தும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,633 வாகனங்களில் சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை மீறிய 116 வாகன உரிமையாளா்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் 200 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எவ்விதமான ஆவணங்களின்றி வந்த 43 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அடிக்கடி இதுபோன்ற வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க