செய்திகள் :

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

post image

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க ஆபரணங்கள் கட்டிகளாக மாற்றப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்யப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கிடைத்த தங்க ஆபரணங்களை அளவிடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இதில் காணிக்கையாக 45 கிலோ தங்கத்தை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறியதாவது: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2011-ஆம் ஆண்டு தங்கம் கணக்கெடுக்கப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் பின்னா் பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் கணக்கெடுக்கப்படவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னா் தங்கம் கணக்கெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு வகை பொன் இனங்கள் இருப்பதால், அவற்றை தரம்பிரித்து உருக்கி கட்டிகளாக மாற்றி, பின்னா் வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி விரைவில் தொடங்கும் என்றனா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க