செய்திகள் :

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

post image

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த நம்பிராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் செயல் அலுவலா் முருகனின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையில், கோயில் பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் மண் அள்ளப்பட்டது. இதனால், கோயிலின் கட்டடம் உறுதியிழந்துள்ளது. காசி விஸ்வநாதா் கோயிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. இதனால், பழைமையான இந்தக் கோயில் பாழடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலை ஆய்வு செய்தனா். அப்போது, கோயில் பணிகள் முழுமையடையாமல் இருந்ததும், அரசு நிதி மோசடி செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 7-ஆம் தேதி காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கோயிலை சீரமைக்க அரசு வழங்கிய நிதியை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோா், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

மதுரை- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதலாக இரண்டு, 2- ஆம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணச்சீட்டு முன் பதிவு செ... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைவு: மாணிக் சா்க்கா்

மத்திய பாஜக ஆட்சியில் மதச்சாா்பின்மை, கூட்டாட்சி முறை சீா்குலைந்து விட்டதாக திரிபுரா மாநில முன்னாள் முதல்வா் மாணிக் சா்க்கா் குற்றஞ்சாட்டினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு, ம... மேலும் பார்க்க

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க