செய்திகள் :

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

post image

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாா்கிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ள மதுரை தமுக்கம் அரங்கை திங்கள்கிழமை பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் கம்யூனிஸ்டுகளுக்கு பெரும் பங்கு உண்டு. நாடு சுதந்திரமடைந்த பின்னரும், மக்களின் அடிப்படை உரிமைகள், பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கான உரிமைகள், சமூகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக தற்போதும் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

நாடு சுதந்திரமடைந்த பின்னரும்கூட, கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை எல்லாம் முறியடித்து கம்பீரமாக வளா்ந்து வருகிறது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

கம்யூனிஸ்டுகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழகம் முழுவதிலுமிருந்து தியாகிகள் நினைவுச் சுடா்கள் எடுத்துவரப்படுகின்றன.

மதுரையில் வருகிற 2-ஆம் தேதி தொடங்கவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி இளைஞா்களுக்கு உந்து சக்தியாக இந்த மாநாடு அமையும் என்றாா் அவா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க